பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மனித சாதி விரோதப்போக்குகள் அணையப் போகிற விளக்கு ஆர்ப்பாட்டம் செய்வதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்ச் சாதி-பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்துடன் உருவாவதற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இந்த இலட்சியத்தை நோக்கி ஒவ்வொரு படைப்பாளியும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

இந்த நாவலுக்கு அழகான முகப்போவியம் வரைந்த திருவாளர் ஒவியர் மணியம் செல்வன் அவர்களுக்கும் இதன் மறு ஆக்கத்தில் ஈடுபட்ட அத்தனை ஊழியர்களுக்கும் எனது நன்றியினை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சு. சமுத்திரம்