பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

வனையும், மற்றச் சாமிகளையும் நோக்கி செபம்பண்ணி வருகிறேன். அவர்கள் என் பிரார்த்தனையைக் கேட்கிறார்களென்று நான் நினைக்கவில்லை, யம்மா! ஏன், தய வாயி, அந்தச் சாமி பூதங்கள் இங்த படவைப் போல் ஒரு மரந்தானே. அவைகள் எப்படிக் கேட்கும்? நான் பிரார்த்திக்கிற தேவனோ இந்த லோகத்தையும் வானலோகத்திலுள்ள நட்சத்திரங்களையும் உண்டாக்கினவராக்கும் என்று சொல்லவே; இருளாயிக்கு இது புத்தப் புதுசாயும் ஆச்சரியமாயும் இருந்ததினாலே, மறுபேச்சுப் பேசாமலும், என்ன ஏதேன்று அதிகமாய் விசாரியாமலும் இருந்து