பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ள்ளதென்று ஒப்புக்கொண்டதுமல்லாமல், இந்தக்காலமுதல் அவளை ஏசவுமில்லை, பேசவுமில்லை; அவள்மேல் ஒரு துரும்பெடுத்துப் போடத் துணியவுமில்லை. இதற்குக் கொஞ்சநாளுக்குப் பிறகு, பாதிரிமார் வைக்கிற தேவாராதனைக்குப் போய் வரும்படி இடங்கொடுத்ததுந் தவிர, தானுங் கூடப் போக ஆரம்பித்து, தன் பிள்ளைகளுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவுஞ் சம்மதித்தான்.

இதை வாசிக்கிற பிள்ளைகளே, இப்போது சொல்லிவந்த பெண்ணாகிய இருளாயி தான் சங்கடப்பட்ட வேளையில் தேவனை நோக்கிச் செபம்பண்ணிச் சகாயம் பெற்று-