பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

க்கொண்டாள். இதுவுமல்லாமல் முதலில் கொடுசூரியாயிருந்த இவள் குணசாலியானதுமன்றி, தான் வாழ்க்கைப்பட்ட புருஷனையும் சத்திய மார்க்கத்துக்குத் திருப்பிக் கொண்டாள். ஆபத்துக்காலத்தில் நீங்களுங் கர்த்தரைப் பார்த்து பிரார்த்தனை பண்ணுவீர்களானால், கர்த்தர் உங்கள் செபத்தைக் கேட்டு, உங்களுக்கு ஒத்தாசை செய்வார். உங்களைச் சுற்றி அக்கம்பக்க மிருக்கிறவர்களையும் உங்களுடைய நன்மாதிரியினாலே மனந்திருப்பும்படி தேவ சகாயத்தைத் தேடி முயற்சி செய்வீர்களாக.

முற்றிற்று