பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

றார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு குடும்பத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன், கேளுங்கள்:

ஒரு படவு கந்தோன் பட்டணத்துக்கு ஓரமாய்ப் போக, படவின் பின் பக்கத்தில், ஒரு பெண் தன் குழந்தையை ஒரு துணியிலே கட்டி, மாராப்புப் போட்டுக் கொண்டு உட்காந்திருந்தாள். அவளுடைய மகன் முன் பக்கத்திலே இருந்து படவைத் தள்ளிக் கொண்டு போனான். பதினாறு வயசுள்ள அவன் தங்கச்சி குறாவின முகத்தோடு அவனுக்குப் பின்னாலே யிருந்து, மெள்ளமெள்ளத் துடுப்பு வலித்தாள். இவள் பேர் இருளாயி. அண்ணன் தங்கச்சி-