பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மில்லையே; ஆகையால் நான் ஒரு பெண்ணபிருக்கிறதைப் பார்க்கிலும் மாடாய்க் கழுதையாயிருக்தால் தாவிளை அண்ணே என்று சொல்ல, அப்போதவன்: பெண்ணுடைய ஆத்துமா மிருகத்துக்குள் பிரவேசிக்குமென்று நமது குருக்களுஞ் சொல்லுகிறார்கள். ஆகையால் நீ மாடாயாவது கழுதையா பாவது இருக்க விரும்புவது ஆச்சரியமல்ல. ஆகிலும் இது உனக்கு அதிக வருத்தமான கால மென்று நான் நினைக்கிறதில்லை. நம்மெல்லாருக்குங்கூடிய மட்டும் போதுமான அரிசியும் மீனுமிருக்கிறது. இதைத் தவிர, சீக்கிரத்திலே தகப்பனுந் தாயும் உனக்கு