பக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ✤ ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்

ஆசை யார்வமோடு ஐயமின்றியே

ஓசை போய் உலகுண்ன நோற்ற பின்

ஏசு பெண்ணொழித்து இந்திரர்களாய்

தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார் (அலாய்சியஸ் II 117)

என்னும் அடிகளையும், பூர்வ புத்த சமய அரசர்கள் வாழ்ந்து வந்த இடத்திற்குச் சேரி என்ற பெயர் உண்டென்பதற்கு,

தேனுலாமதுச் செய்கோதை தேம்புகை கமழ்வூட்டி

வானுலாச் சுடர் கண்மூடி மாநகர் இரவுச் செய்யப்

பானிலாச் சொரிந்து நல்லராணிகலம் பகலைச் செய்ய

வேனிலான் விழைந்த சேரி மேலுலகனைய தொன்றே

என்ற பாடலையும் வள்ளுவர் என்பார் புத்த அரசர்களின் கன்மத் தலைவர்களாக விளங்கியவர் என்பதற்கு,

கோத்த நித்திலக் கோதை மார்பினான்

வாய்த்த வன்னிரை வள்ளுவன் சொனான் (அலாய்சியஸ் II 125)

என்னும் அடிகளையும் வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிய ஆரியர்களே மிலைச்சர், மிலேச்சர் என்று அழைக்கப்பட்டனர் என்பதற்கு,

‘வெங்கண் நோக்கிற்குப் பாயமிலேச்சனைச் செங்கண் தீவிழியால் தெறித்தான்’ (அலாய்சியஸ் I 123)

என்னும் அடிகளையும் புத்த சங்கத்தில் சேர்ந்து சத்திய தன்மத்தைப் பின்பற்றிச் சமண நிலையிலிருந்து தம்மைப் பார்ப்போர்களே பார்ப்பார் என்று அழைக்கப்பட்டார் என்பதற்கு,

நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்

என்பாரை ஓம்பேன் எனின் யான் அவனாவனென்றான் (அலாய்சியஸ் I 120)

என்னும் அடிகளையும் சமணரில் சித்தி பெற்றோர் சாரணர் என்று அழைக்கப்பட்டார் என்பதற்கு,

இலங்கு குங்கும மார்பன் எந்துசீர்

நலங்கொள் சாரணர் நாதன்கோயிலை (அலாய்சியஸ் I 558)

என்னும் அடிகளையும் ஒழுக்கமுடையோராய்த் தீவினையை அகற்றியவர்களே தேவர்களென்று அழைக்கப்பட்டார் என்பதற்கு,

யாவராயினும் நால்வரைப் பின்னிடில்

தேவரென்பதும் தேறும் இவ்வையகம் (அலாய்சியஸ் I 560)