ப. மருதநாயகம் ✤ 135
ஒடுங்கித்தச நாதங்கள் எழுமென்று ததாகதர்
அஷ்டாங்க மார்க்க மன அமைதியில் விளக்கியிருக்கின்றார்.
விழிப்பின் விழிப்பால் வளர் நாதம் தோன்றிசுழித்திக் கெடும் என்றறி
சுழித்திக் கெடுதல் சுத்த ஞானத்தில்
விழித்தப் பலன் என்றறி.
சுத்த ஞானத்தால் தோன்றிய நாதம்
முத்தியின் வாயன் முனை (அருங்கலைச் செப்பு)
இதை அனுசரித்தே கிறீஸ்துவானவரும் தனது மாணாக்கர்களுக்கு ஞான சாதகக் கடைசி நாளில் எக்காளம் தொனிக்கும் என்று கூறியிருக்கிறார் . . .
இதையே அப்போஸ்தலர்கள் சுரமண்டல தொனிகளென்று வரைந்திருக்கிறார்கள்.
அக்காலத்தில் தேகங்கூர்ச்சி, உரோமம் சிலிர்த்து, இதயம் படபடத்து, இரத்த வியர்வை பொழிவதாகும். கிறீஸ்துவுக்குப் பாடு நேரும் சமயத்தில் கெத்திசேமென்னும் தோட்டத்தில் மேற்கூறிய குறிகள் நேர்ந்தது.
இத்தகைய சாதனத்தையே தாயுமானவரும் தெள்ளற விளக்கியிருக்கிறார்.
உடல்குழைய என்பெலா நெக்குருக விழிநீர்கள் ஊற்றென வெதும்பியூற்ற
ஊசி காந்தத்தினைக் கண்டணுகல் போலவே ஒருரவும் உள்ளி உள்ளி
படபடென நெஞ்சம் பதைத்து உள் நடுக்குறப் பாடியாடிக் குதித்து
(அலாய்சியஸ் I 579)
கடவுள் என்னும் சொல் தமிழ்ச் சொல்லேயென்றும் அச்சொல்லை முதலில் கையாண்டவர்கள் சமண முனிவர்களேயென்றும் அது நன்மையென்று பொருள்தரும் என்றும் புத்தரையே அவர்கள் ஆதிதேவனென்றும் கடவுள் என்றும் குறித்தார்களென்றும் உலகத்தைப் படைத்த கடவுள் ஒன்று உண்டு என்று பேசுவதெல்லாம் வீண் என்றும் ஒரு கடவுள் இல்லாததால்தான் பல சமயத்தார் பல கடவுளைப் பற்றிப் பேசி வருகின்றார்களென்றும் வாதிடும் தாசர் தம் கருத்திற்கு அரண் செய்யத் தாயுமானவர் பாடல்களையும் கொண்டு வருவது வியப்பளிக்கும். அவர் அதற்குச் சான்று காட்டும் பாடல்,
எனதென்பதும் பொய் யானெனல் பொய் எல்லாம் இறந்த இடம் காட்டும்
நினதென்பதும் பொய் நீயெனல் பொய் நிற்கு நிலைக்கே தேசித்தேன்
மனதென்பதுவோ என் வசமாய் வாராதைய நின்னருளே
தன தென்பதுக்கும் இடம் காணேன் தமியேன் எவ்வாறு உய்வேனே.
(அலாய்சியஸ் II 30)
என்பதாகும்.