பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4

உயர்ந்த உள்ளங் கொண்டவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்டவர்கள் பிறந்த புண்ணிய பூமியில் நாமும் பிறந்திருக்கிறோம் என்பதே ஒரு பெருமைக்குரிய விஷயம். நல்லதொரு நூலை சுவைபட எழுதியுள்ளார் கே. பி. நீலமணி. சிறந்த எழுத்தாளர்களிலே ஒருவரான கே.பி.நீலமணியின் எழுத்துக்களிலே உணர்ச்சி இருக்கும்-உத்வேகம் இருக்கும் -கருத்து இருக்கும்! நானே இப்புத்தகத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டு போனால்...! தயவுசெய்து நீங்களும் படித்துப் பாருங்களேன்.


அன்பன்
லெ.இராமநாதன்.