பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A-7. "

இரண்டை எடுத்துக் கொண்டு வழக்கமான மார்வாடி கடைக்குப் போனன்.

கனமான பிளேட்டை வாங்கிக் கொண்டு கிழவன் கேட்ட சொல்பத் தொகையைக் கொடுக்கப்போன மார் வாடி அந்தப் பிளேட்டுகளில் மின்னிய கல்லூரியின் பெயரைப் பார்த்து விட்டுப் பொறி கலங்கிப் போனன். ஆனல் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், போனில் எனக்குத் தன் கடை விலாசத்தைக் கூறி உடனே நேரில் வரும்படி கூறினன்.

நான் உடனே மார்வாடிக்கு இதோ புறப்பட்டு வரு கிறேன் என்று போனில் பதில் கூறிவிட்டு கிளம்ப எண்ணிக் ெ காண்டிருக்கும் போதுதான் மூர்த்தி என் அனுமதி கேட்டு என் அறைக்கு வந்தான்.

நான் அவனிடம் அப்போது போன் காலப் பற்றி ஏதுமே பேசவில்லை.

என்ன விஷயம்? என்று பாபுவின் விஷயமாகப் பேச்சை ஆரம்பித்தேன். உடனே மூர்த்தி, ஹாஸ்டல் சாமான்கள் பாபுவின் வீட்டில் ஒளித்து வைக்கப் பட்டிருப்பதாகவும், உடனே புறப்பட்டால் அதைக் கண்டு பிடித்து விடலாம் என்று கூறி என்னைப் பிடிவாதமாக அழைத்தான்.

மார்வாடி கடைக்குப் போவதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று மூர்த்தியுடன் பாபுவையும் அழைத்துக்

கொண்டு பாபுவின் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு நாங்கள் சென்ற பிறகு மூர்த்தி ஏமாந்த வித மும் அவனையும் அழைத்துக் கொண்டு நான் மார்வடி கடைக்குப் போனதும் தெரிந்திருக்கும்.