பக்கம்:ஒரு மாணவன் மகாத்மாவாகிறான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93


யாக அனுபவிக்கத் துவங்கியிருந்தான். இதை முதல்வர் கவனித்தார்.

இந்தத் துவக்கம் தொடரும். அதை அவளுல் தொட ராமல் இருக்க முடியாது. அதற்கான விதை அவன் உள்ளத் தில் ஊன்றப் பட்டு முளை விடத் துவங்கி விட்டது. அது அவன் வாழ்க்கையில் பல கிளைகளில் பல ரூபத்தில் சேவை யும் தியாகமுமாக பரிணமித்து படர்ந்து பெருகி பூவும் கனியுமாகப் பூத்துக் குலுங்கப் போகின்றன.

அந்தப் புதிய அனுபவத்தினுல் ஏற்படும் இன்பத்தைச் சுவைத்துச் சுவைத்து செயல் படட்டும். அது நிச்சயம் அவனை என்ருே ஒரு நாள் எங்கோ ஒர் உயர்ந்த பீடத்தில் ஏற்றி நிறுத்தியே திரும். என்னுடைய அதற்கான ஆசி அவனுக்கு என்றும் உண்டு என்று பாபுவைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த முதல்வரின் அருகில் நின்று கொண்டிருந்த மூர்த்தி மெல்லிய குரலில் பேசிக் கொண்டி ருந்தான்.

உணர்ச்சி வசப்பட்டுப் போயிருந்த அவளுல் உற்சாக மாகப் பேச முடியவில்லை. ஆனல் அவன் பேச்சு உருக்க மாக இருந்தது.

அன்புள்ள நண்பர்களே, எவ்விதம் இறந்தான் என்ப தன்று கேள்வி-எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. என்று கூறிய டாக்டர் ஜான்சனின் வார்த்தை தான் இப் போது என் நினைவிற்கு வருகிறது.

முன்பு நான் எதைப் பற்றியும், ஏன் என்னைப் பற்றியே கூடக் கவலைப் படாமல் தான் வாழ்ந்தேன். ஆனல் என் முன் இப்போதுள்ள ஒவ்வொரு நிமிஷமும் என்னை நோக்கிப் பயமுறுத்துவதுபோலவும் எனக்கு அவற்றை எண்ணிப் பார்க்கவே பயமாயிருப்பது போலவுமே தோன்றுகின்றன’