பக்கம்:ஒரே உரிமை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கருவேப்பிலைக்காரி


அவள் தெருக்கோடி திரும்பும் வரை, "கறிப்பிலை வாங்கலையோ! கறிப்பிலை வாங்கலையோ!" என்ற குரல் என் காதில் எதிரொலி செய்து கொண்டே யிருந்தது.

***

தென்னமோ தெரியவில்லை, அன்று முழுவதும் அந்தக் கருவேப்பிலைக்காரியை என்னால் மறக்கவே முடிய வில்லை. "உங்களோடு என்னையும் சேர்த்துப் பேச முடியுமா, அம்மா?" என்ற அவளுடைய கேள்வி என் மனதை விட்டு அகலவே யில்லை.

ஆமாம், அவளோடு என்னையும் சேர்த்து ஏன் பேசக் கூடாது? ஜாதியில் வேண்டுமானால் உயர்வு தாழ்வு இருக்கலாம்; வாழ்வில் வேண்டுமானுல் உயர்வு தாழ்வு இருக்கலாம். பிறப்பிலே...? நானுந்தான் பெண்ணாய்ப் பிறந்தேன் அவளுந்தான் பெண்ணாய்ப் பிறந்திருக்கிறாள்.

ஆயினும் மனோ பாவத்தில் அவளுக்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம்!

அவனால் அவனுக்கு ஒரு காலணாவுக்கு வழி கிடையாது: திருடிவிட்டு ஜெயிலுக்குப் போவான்; வீட்டில் சும்மா இருக்கும் அவன் அந்தக் குழந்தையைக் கூடத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க மாட்டான்; அதையும் நாளெல்லாம் அவள் முதுகில் சுமந்துகொண்டு திரிய வேண்டும். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இவள் சம்பாதித்து எடுத்துக்கொண்டு போய் அவனுக்குச் சூதாடக் கொடுக்க வேண்டும்; அதுவும் அவசர அவசரமாக. இல்லையென்றால் அவன் அவளை அடித்துக் கொன்று விடுவான். இதை யெல்லாவற்றையும் விட, தான் சம்பாதித்த அரிசியில் தானே கொஞ்சம் திருடி எடுத்துக் கொண்டு போய்ச் சமைத்து, தானும் சாப்பிட்டு அவனுக்கும் கொஞ்சம் எடுத்து வைப்பது போன்ற கொடுமை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/100&oldid=1149370" இலிருந்து மீள்விக்கப்பட்டது