பக்கம்:ஒரே உரிமை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாருக்குப் பிரதிநிதி?

109


அன்றிரவு அவருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. காரணம், அவருடைய மனம் 'மந்திரியின் மகாத்மிய'த்திலேயே லயித்து விட்டதுதான்!

***

றுநாள் காலை ஸ்ரீ அன்னவிசாரம் படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கும், அந்த 'அசல் தரித்திரங்க'ளில் ஒன்று வந்து ஜன்னல் வழியே தலையை நீட்டுவதற்கும் சரியாயிருந்தது.

"யாரடா, அது?"

"நான் தான் குப்பனுங்க!"

"குப்பனா!"

"ஆமாங்க, நேத்து வந்து குடிசையைப் பிரிச்சுப், போட்டுட்டாங்கன்னு முறையிட்டுக்கிட்டோ மில்லே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனுங்க!"

"ஓஹோ! இப்போது ஏன் இங்கே வந்தாய்?"

"மேலிடத்திலே எங்களைப் பற்றி ஏதாச்சும் சொன்னீங்களான்னு கேட்கத்தான் வந்தேனுங்க!”

"மேலிடம் என்னடா மேலிடம்! எனக்கு மூளைகீளை ஒன்றும் கிடையாதா? நாலு பேருக்கு நல்ல தென்று எண்ணி ஒரு காரியம் செய்தால், அது ஓரிருவருக்குக் கெடுதலாகவும் முடியுந்தான்! அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா, என்ன?—போ, போ!"

"என்ன சாமி, இப்படிச் சொல்றீங்க? 'நீங்க எங்க பிரதிநிதி, எங்க பக்கமாப் பேசத்தான் மேலிடத்துக்குப் போயிருக்கீங்க'ன்னு கோடி வீட்டு ஐயா சொன்னாரே! உங்க பேச்சைப் பார்த்தா நீங்க 'யாருக்குப் பிரதிநிதி' ன்னு தெரியலைங்களே!" என்றான் குப்பன் வியப்புடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/111&oldid=1149395" இலிருந்து மீள்விக்கப்பட்டது