பக்கம்:ஒரே உரிமை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

என்ன பாவம் செய்தேன்?

பாலின் சுவையும் கலந்திருப்பது போல் எனக்குத் தோன்றுவதில்லை; விஷமும் விளக்கெண்ணெயும் கலந்திருப்பது போல் தோன்றும்.

"ஏன் அப்பா!" என்று கேட்டுக் கொண்டே வந்தால் அவர் முன்போல் என் கன்னத்தை அன்புடன் கிள்ளி, ஆசையுடன் தூக்கிவைத்துக் கொள்வதில்லை. "போ, உள்ளே ! இன்னொரு தரம் அங்கேயெல்லாம் போனாயோ, உன் காலை ஒடித்து விடுவேன்!" என்று எரிந்து விழுந்தார்.

அவர் மட்டுமா? அம்மாவும், "காப்பிசுடச் சாப்பிடாமல் இத்தனை நாழி எங்கே போயிருந்தாயாம்?" என்று முன் போல் என்னைச் செல்லமாகக் கடிந்து கொள்வதில்லை: "இத்தனை நாழி வெளியே என்னடி வேலை, உனக்கு? பேசாமல் ஒரு மூலையைப் பார்த்துக் கொண்டு உட்காரு" என்பாள், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

"இதென்ன வேடிக்கை! இவர்கள் இப்படி எரிந்து விழும்படியாக நாம் என்ன குற்றம் செய்தோம்?" என்று ஒன்றும் புரியாமல் நான் 'திரு திரு' வென்று விழிப்பேன்.

என் வாழ்நாட்கள் இப்படியே புரிந்தும் புரியாமலும் சென்று கொண்டிருந்தன. கடைசியில் என் பெற்றோர் கவலையைத் தீர்க்கும் அந்த நாளும் வந்தது. "இதுவரை உன் பெற்றோர் உன்னைக் காப்பாற்றியது போதும்; இனி மேல் நான் காப்பாற்றுகிறேன், வா!" என்று சொல்லிக் கொண்டு யாரோ முன் பின் தெரியாத ஒருவன் வந்து என் கரங்களைப் பற்றினான். நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன்.

தங்கள் கவலை தீர்ந்ததென்று எண்ணியோ என்னமோ, என் பெற்றோர் எனக்குக் கல்யாணமான சில வருடங்களுக் களுக்கெல்லாம் ஒருவர் பின் ஒருவராகக் கண்ணை மூடி விட்டார்கள்.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/132&oldid=1149437" இலிருந்து மீள்விக்கப்பட்டது