பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. கதையும் காரணமும்

உள்ளத்திற்கு உணர்ச்சியும், உடலுக்கு எழுச்சியும், வாழ்வுக்கு மலர்ச்சியும் மகிழ்ச்சியும் தருவன விளயாட்டுப்பந்தயங்களே. சாதி மத பேதங்கள் சாடாத, ஏற்றத்தாழ்வு ஏறிட்டுப் பார்க்காத இனியதொரு சமுதாயத்தை உருவாக்கித் தருவது விகளயாட்டுப் பந்தயங்களே. மனித இனத்தின் வலிமைக்கு வடிகாலாக, தனி மனிதன் திறமைக்கு ஊன்றுகோலாக விளங்குவதும் விளையாட்டுப் பந்தயங்கள் தாம்.

நூற்றுக்கணக்கான நாடுகள் நேயத்துடன் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான வீரர்களும். வீராங்கனைகளும் ஆர்வத்துடன் போட்டியிட, இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அமைத்தப் பந்தயக் களத்திலே, கோடிக்கணக்கான மக்கள் குதூகலத்துடன் கண்டுகளிக்குமாறு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகள் எல்லாம் குறித்த ஓரிடத்தில் கோலாகலமாகக் கொண்டாடி நடத்தப் பெறும் பந்தயத்திற்கே ஒலிம்பிக் பந்தயம் என்று பெயர்.

விளையாட்டுப் பந்தயங்கள் என்று அழைக்காமல், 'ஒலிம்பிக் பந்தயங்கள்’ என்று ஏன் அழைக்க வேண்டும் ? என்ற சந்தேகம் வருவது இயற்கையே. இந்தக் கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால், நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லத்தான் வேண்டும்.

'நல்ல உடலிலே நல்ல மனம்’ என்ற கொள்கையைக் கடைப்பிடித்து, வலிவும் வனப்பும்தான் வாழ்வுக்குத் தேவை'