பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19 பெறவும் காரணமென்று முன்னரே குறிப்பிட்டிருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம், இருந்தும், எவ்வாறு பகை நாடுகள் கூடி, பந்தயங்களே நடத்தின என்றும் நீங்கள் கேட்கலாம்? போர் என்பது அவர்களுக்குப் பொழுது போக்குப் போல. எப்பொழுது பார்த் தாலும் யாருடனுவது யுத்தம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். அதற்காக, பந்தயங் களே நிறுத்தி வைத்துவிட முடியுமா ? ஆகவே, அவர்களுக் குள்ளே ஒர் ஒப்பந்கமும் உடன்படிக்கையும் செய்து கொண்டனர். 'ஒலிய பிக் பந்தயம், கிரோமினியா’ என்ற மாதத்தில் மட்டுமே நடைபெறுவதால், அந்த மாதத் தில் யாருமே போர் செய்யக் கூடாது. யுத்தத்தை நிறுத்தி விட வேண்டும். அமைதியாக இருந்து, ஆற்றல் மிகுந்த பந்தயக் களத்தில் பங்கு பெற்றிட வேண்டும். சண்டைபோடும் நாடுகள் பந்தயம் நடக்கும்போது சமரசமாகவே இருக்க வேண்டும்” என்ற சபதத்தை கி. மு. 884-ல் எடுததுக் கொண்டதாகவும். அந்த விதி 12 78 ஆண்டுகள் தொடர்ந்து |வந்ததாகவும் சரித்திர ச் சான்றுகள் பகர்கின்றன.

இந்த அடிப்படையிலே தான் அனத்து நாடுகளும் போட்டிகளில் கலந் து கொண்டன, போட்டியிட்டன. ஆனால், "போர் புரியும் கருவிகளுடன் யாரும் பந்தயத் திடலுக்குள் நுழையவே கூடாது . அவ்வாறு, போர்க் கருவிகளுடன் ஒலிம்பியாவுக்குள் வர நேர்ந்தால, அவர்கள் எல்லிஸ் என்ற இடத்திற்குச் சென்று, கருவிகளைப் பத்திர மாகக் கொடுத்து வைத்துவிட்டு. பந்தயம் முடிந்த பிறகு கண்டும் போய் எடுத்துக் கொள்ளவேண்டும். பகைவர் களோடு கலந்துறவாடவும், நெருங்கி நிற்கவும், பேசவும் பார்க்கவும் போன்ற நிலைமை ஏற்படும். என்ருலும், நண்பர் களாகவே பழகவேண்டும். எந்தவிதமான அசம்பாவித நிழ்ச்சிகளும் நடக்கக்கூடாது' என்று அவர்கள் கட்டுப் பாட்டோடு இருந்தபோதிலும், சில சமயங்களில், எல்லமீறிய நிகழ்ச்சிகள் அல்வப்போது நடந்து இருக்கின்றன.