பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:Rh 58

 உண்மையுடன் வழிபட்டனர். பெருமையுடன் ஏற்றுக் கோண்டனர். ஆஞ்ல், பாதை மாறிப்போன பிற்கால மக்களுக்கு, அந்நியர் ஆட்சியில் அடங்கிக் கிடந்த மக்களுக்கு எவ்வாறு புரியும் ? இலையாலான மலர் வளையப் பரிசு எங்களுக்குத் தேவையில்லை' என்ற அளவுக்கு கிரேக்க, நாட்டு வீரர்கள் கேவலமாகப் பேசத் தொடங்கினர். வெறும் புகழ் ஆரவாரம், வெற்றுக் கூச்சல், வீணான பேச்சு வார்த்தை அலங்காரம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது. என்று வாதாடவும் தொடங்கி விட்டார்கள். இவ்வாறு பேசியவர்கள் இறு கியாக, வெற்றிக்குப் பரிசாகப் பணமும், விலையுயர்ந்த பரிசுப் பொருள்களுமே வேண்டும் என்று. விரும்பினர். வற்புறுத்தினர் வேறு வழியில் அல. அவர்கள் வளர்ந்த வளர்ப்பு அவ்வாறு ? பெற்ற. பண்பாடு அப்படி.

நாட்டுப் பற்ருேடும். நல்லிறைவன் திருப்பெயரோடும், ந்னிசான்ற உடல் ஆற்றலோடு இணைந்த மத விழா வாகவும், மாண்புமிகு விளையாட்டு விழாவாகவும், கிரேக்க் நாட்டிலே கொண்டாடப்பெற்ற ஒலிப் பிக் பந்தயங்கள், நாளாவட்டத்திலே தமக்குரிய மகத்துவத்தை, முேம்

பாட்டை இழக்கத் தொடங்கின. புனித விழாவாகப் புவியிலே பிறப்பெடுத்த பந்தயக் திடல், மேலும் மேலும் வியாபாரத் தலமாக, வம்பர்கள் கூடி வாயாடி மகிழும் மடமாக, வேடிக்கைக் காட்டும் சர்க்கஸ் கூடாரமாக, பொழுது போக தவர்கள் ஏனுேதானேவென்று வேடிக்கைப் ப்ார்த்தப் பொழுதைக் கழிக்கும் இழிநில அரங்கமாக, மாறத் தொடங்கியது.


இத்தனைக்கும் மேலாக, இன்ைெரு நிகழ்ச்சி. நடந்தது: மண்ணுளும் மன்னன் நீரோ செய்த அக்கிரமங்கள்தான் : ஒலிம்பிக் பந்தயங்கள் ஒழிந்து போவதற்கே காரணமாய்: அமைந்தன. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'. "மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி' என்பது தன்னிக