பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



66


மேற்கொண்டு அயராது உழைத்தார், கல்விக்கென்று ஒருபுதிய தத்துவத்தைப் படைத்து, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதி தாமே வெளியிட்டார்

"கல்வியும் விகளயாட்டும் ஒன்ருேடொன்று இணைந்து சென்ருல்தான் சிறந்த கல்வி அமையும்" என்று அவர் கண்டெடுத்த மணியான கொள்கை- நல்ல உடலில் நல்ல மனம் .என்று கிரேக்கர்களது கொன்கைக்கு உடன்பாடாக இருந்தது. விளையாட்டு - உடலையும், கல்வி - மனதையும் பண்படுத்துகிறது. பதப்படுத்துகிறது' என்ற உயர்ந்த நெறியை உலகம் உணtந்து உய்ய வேண்டும் என்று விரும் பினர். அகில உலகில் உள்ள அத்தனை நாடுகளும் அமைதி யோடும், ஆனந்தத்தோடும் ஒன் ருக சேர்ந்து வாழவேண்டு மா ைல், அதற்குப் பாலமாக அமைவது விளையாட்டுக்களாகத் தான் இருக்க முடியுமே தவிர, வேறு எதலுைம் முடியவே முடியாது என்ற கொள்கையில் மிகவும் உறுதியாகஇருந்தார்.

"உடல் வளர்ச்சியும் மனவளர்ச்சியும் என்றும் இணை: பிரியாத, பிரிக்க இயலாத ஒன்று’ என்ற அந்தத் தத்து வத்தில் அவர் ஆழ்ந்த நமபிக்கைக் கொண்டிருந்தார். சிறந்த கல்வியை ஒருவன் பெற வேண்டுமானல், அவன், சிறந்த உடல் நலம், வளம் வாய்ந்தவகை இருக்க வேண்டு - என்பதே அவரின் கொள்கை .

அகில உலகக் கல்விதனே ஆராயும் பொறுப்பு மேற்கொண்ட பின். பல நாடுகளைச் சுற்றிப் பார்க்கின்ற வாய்ப்பு பிரியக்கு ஏற்பட்டது. வாய்ப்பு வந்த பொழுது. தன். இன்பத்தைப் பற்றியே எண்ணுமல், தனக்குரிய பொறுப்பை, உணர்ந்தார். தம்ம்ைப் பற்றியே சிந்தனையும் படாடோபமுழே: நிறைந்த பிரபுக் குடும்பத்திலே பிறந்த அவர், பிறர்க்கென: வாழும் பெருந்தகையாளராக வாழ்த்தார். அவருடைய