பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71

பர்ப்பினால் 'தான் முடியும் என்ற முடிவுக்கு. ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு வந்தார்.

ஏனென்ருல், அவர் வாழ்ந்த சூழ்நிலை அவ்வாறு இருந்தது. பதவிக்குப் போட்டியும் பொருமையும் மிகுந் திருந்த காலம். நடந்து கொண்டிருக்கும் உலகப் போர் முடிவதற்குள்ளாகவே, அடுத்த சண்டையை ஆரம்பிக்க ஆவலோடு திட்டம் திட்டிக் கொண்டிருந்த நாடுகள் ஏராளம். நிற வேற்றுமை நாகமென சீற, மதவெறி வாய் பிளந்து அலையும் முதலையெனத் திரிய, தொழி லாளர்களை வதைத்து முதலாளிகள் முழக்கமிட, துயர்ப் பட்டத் தொழிலாளிகள் உரிமை கேட்டுப் போராடிய நிலை விளையாட்டுக்களை வணிக முறையாக்கி மக்கள் மகிழ்ந்திருந்த நேரம். விளையாட்டுக்களிடையே குழப்ப மும், சச்சரவுகளும், தருக்கித் திரியம் பேயர்களும் இருந்து பேயாட்டம் ஆடிய சூழ்நிலை யில்தான், பியரி கூபர்டின் தனது கருத்தை உலக அரங்கிலே சமர்ப்பித்தார்.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள, புகழ் வாய்ந்த, தன்னைப்போல 'விகளயாட்டுக்களிலே தான் விழுமிய வைகள் கிடைக்கும்" என்று நம்பிக்கையுள்ள சிறந்த மனிதர்களைத் தெரிந்து. தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் மூ ய சிக் கு ஒ த் து ைழ க் கு ம று கேட்டுக் கொண்டார்.

அதன் தொடர்பாக, கருத்தரங்கு ஒன்றையும் கூட்டினர். இங்கிலாந்து நாட்டின் சார்லஸ் ஹெர்பர்ட். அமெரிக்க தாட்டின் பேராசிரியர் வில்லியம் சுலோன், ரஷ்டிச் தாட்டின் ஜெனரல் போந்தவஸ்கி. ஸ்வீடனின் கர்னல்விக்டர் பால்க். கங்கேரி நாட்டின் கெம்னி போன்ற ஆற்றல் மிக்க