பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


கி. மு 49-ம் ஆண்டு பெர்சியர்களுக்கும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஏதென்ஸ் நகரத்தினருக்கும் "மிலிட்டி பாட்ஸ்' என்ற இடத்தில் கடுமையான போர் ஒன்று நிகழ்ந்தது. வாழ்வா சாவா" என்ற மரணப் போராட்டத்திலே இறங்கி போராடிக் கொண்டிருந்தனர் ஏதெனல் படை வீரர்கள். கப்பலில் இருந்து அணி அணியாக இறங்கி வந்த பெர்சியர்களை, கலங்கடித்து விரட்டினுல் ஒழிய, ஏதென்ஸ் நாடும் நகரமும் நாமும் வாழமாட்டோம் என்ற முடிவிலே, ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் ஏக்கத்திலே மூழ்கியிருத்தனர்.

அன்றாடம் கூடும் சந்தைப் பகுதியிலே, ஏதென்ஸ் நகரத்தின் முக்கியத் தலைவர்கள் எல்லோரும் கூடி நின்று. போர்க்களத்திலிருந்து நல்ல சேதி வாராதா'ப் வ்xச்ழ்ப் நிம்மதியைத் தாராதா என்று நீண்ட தோர் வீ கியினைப் பார்த்து, நெடு மூச்சு எறிந்து கொண்டிருந்த நோம் ஈசல்போல் கப்பலி லிருந்த புறப்பட்டு வரும் பத்தாயிரம் பெர்சிய வீரர்களைப் புயலாகத் தாக்கி, மலையடிவ்ாரத்தின் கீம் இருந்து சமவெளியில் விரட்டி விரட்டி அடித்துக் கடலுக்கே ஒட்டி கப்பலுக்குள் ஒடி ஒளிந்துகொண்டு. பின்னுேக்கிச் செல்லும் அளவுக்கு ஏதென்ஸ் வீரர்கள் ோரிட்டார்கள்...வெற்றியும் பெற்று விட்டார்கள் . == எதிரிகளே வெற்றி கொண்ட சேதியை, எவ்வாறு தங்கள் நகர மக்களுக்குத் தெரிவிப்பது என்ற ஏககம், ஏதென்ஸ் நாட்டுப் படைத் தலவனுக்கு ஏற்பட்டது.' இக்காலத்தில் இருப்பது போன்ற வாகன வசதிகள் : அக்காலத்தில் இல்லையே? மிலிட்டியாட் என்ற போர்க்: களப் பிரதேசத்கிற்கும். ஏதென்ஸ் நகரத்திற்கும் இருந்த் , தூரமோ 40 கிலோ மீட்டர் (அதாவது 24 மைலும் 1500) கெஜமும்). வெற்றிச் செய்தியை ஒரு வீரனே கொண்டு: -செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான் படைத் தலைவன். அந்தப் பொறுப்பை ஏற்றவன் "பிடிப்பைட்ஸ்"