பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

வைத்துக் காத்திருந்த மக்கள், வீரன் ஒருவன் ஒடி வருவதை ஆவலோடும் கவலையோடும் பார்த்தனர். தள்ளாடித் தள்ளாடி ஓடி வந்த வீரன், 'வென்று விட்டோம் மகிழ்ச்சி கொள்ளுங்கள்' என்று கூவினான்.

ஆனந்த வெறியிலே கூவியது அவனது வாய், மூச்சு விடத் திணறியது அவன் நாசி. இனிமேல் ஒத்துழைக்க முடியாது என்பது போல் கால்கள் பின்னிக் கொள்ள, கீழே திடீரென்று வீழ்ந்தான் வீரன். மீண்டும் அவன் எழுந்திருக்கவேயில்லை. ஒலிம்பிக் பந்தய வீரனுக வாழ்ந்தவன், கடமை வீர கை இருந்தவன், இறந்தான், கொண்டு வந்த கற்கண்டு சேதியைக் கொடுத்து விட்டும் படுத்து விட்டான். பெரும் புகழ் தொடுத்து விட்டான்.

அவனது புகழ் பாடும் பெருமைமிகு வரலாற்றை நினைவ படுத்தும் வண்ணம். அவன் ஒடி வந்த தூரத்தை "மாரதான் ஒட்டம்' என்ற பெயரிட்டு, புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் சேர்த்தனர்; அந் நிகழ்ச்சியைச் சேர்க்கத் துண்டியவர்_மைக்கேல் பிரேல் என்பவர்: அவர் பியரியின் சிறந்த நண்பரும் ஆவார்.

ஒன்பது ந ா டு க ேள உவகையுடன் ஈடுபட்டு; துவக்கிய ஒலிப் பிக் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்ள உலக நாடுகளே இன்று போட்டி போட்டு: கொண்டு வந்து சேருகின்றன. ஒலிம்பிக் பந்தய என் ருலே உலக மக்க ளிடையே ஒரு கல கலப்பும் கிளு கிளுப்பும் சேர்ந்து, இன ந் .ெ த ரி யா த இ ன் ப த் தி ! ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. 1896 .ஆ ம் ஆண் 9 நாடுகள் பங்கேற்றன. 1928ஆம் ஆண்டு 46 நாடுக கலந்து கொண்டு. பெருமை தேடிக் க்ொண்டன. 1970ஆம் ஆண்டு 139 நாடுகளுக்குமேல் உலக ஒலிம்பிக் பந்தயக் கழகத்தில் அங்கத்தினராகப் பதிவு செய்து,