பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற செல்வம்

“முகுந்தா! முகுந்தா!! என்னடா செய்கிறே?” என்று கேட்டுக் கொண்டே விநோதினி வந்தாள்.

“அக்கா! வீட்டுப் பாடம் செய்றேன். எதற்கு என்னைத் தொல்லைப்படுத்தறே” என்று கேட்டான் முகுந்தன்.

“அப்பா அவசரமாக வெளியே போகணுமாம் சீக்கிரம் வா. ஒரு விஷயத்தைச் சொல்றேன்” என்று அழைத்தாள் விநோதினி.

முகுந்தன் எழுதியிருந்த பாடத்தைப் பாதியில் விட்டுவிட்டு எழுந்து சென்றான். விநோதினி அவனை அழைத்துக் கொண்டு அப்பாவின் அருகில் சென்றாள்.

அக்கா எதையோ சொல்லப் போகிறேன் என்று அழைத்தாள். இப்பொழுது...... அப்பாவிடம் அழைத்து வந்து நிற்கிறாளே. வீட்டு வேலைகள் செய்யவில்லை என்று என்னைப் பற்றிச் சொல்லப்

ஒ-7