பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

109


“அப்பா! தம்பி ஒவியப்போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்கிறான். அம்மா படத்தின் அருகில் இருப்பது அவனுக்குக் கிடைத்த பரிசுகள்.” என்றாள் விநோதினி.

கார்த்திகேயன் முகுந்தன் அருகில் சென்றார். தன் கையில் உள்ள புதிய பிரஷை அவனிடம் கொடுத்தார். அவன் அதை வாங்கித் தன் தாயின் படத்தின் அருகில் வைத்தான். தன் அருகில் நின்றிருந்த தந்தையின் காலில் விழுந்து வணங்கினான்.

விநோதினி இதைக் கண்டதும் ஆனந்தக் கண்ணtர் விட்டாள். கார்த்திகேயன் இருவரையும் அணைத்துக்கொண்டு, நான் பெற்ற செல்வங்கள் நீங்கள். இந்த உலகில் உங்களை விட உயர்ந்த செல்வம் எனக்கில்லை’ என்று கூறி ஆனந்தப்பட்டார்.