பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

33

அமிர்தபுரி ராஜ்யத்தின் மக்கள் அனைவரும் தம் குலதெய்வம் தேவி பராசக்தியை தெஞ்சுருகப் பிரார்த்தித்தார்கள்.

“தாயே! எங்கள் ராஜாவைப் போல இனி எங்களுக்கு வேறு ஒருவர் கிடைப்பதே அரிது. ஆகையால் அவர் புனர்வாழ்வு பெற, நீ அருள் செய். அவருடைய காணாமல்போன மகனை --- எங்கள் யுவராஜாவை எப்படியும் நீதான் அவர் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்...தாயே, மகேஸ்வரி...!”

குணேந்திரபால மன்னரின் கண்களினின்றும் கண்ணீர் வெள்ளம்பெருக் கெடுத்தோடியது. கைப் பிடியிலிருந்த அந்தப் படத்தினையே வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் அரசர், அது அவரது புதல்வனின் திரு உருவப் படம். பாலவயதில் எடுத்த புகைப் படத்தைக் கொண்டு, தன் மகனை இளவரசக் கோலத்தில் கைதேர்ந்த சைத்ரீகனைக் கொண்டு தீட்டச் செய்த உயிரோவியம் அது. ஒவியம் அவருக்குத் தெம்பைத் தந்தது. ஆனாலும் அது அவரின் கண்ணீரை அதிகப்படுத்திவிட்டதே!

“மன்னர் மன்னா!”

அரசன் திரும்பினான்.

பணியாள் ரவிசேகரன் வணக்கம் செலுத்தி விட்டு முன் வந்தான்: வந்து கையிலிருந்த மருந்தைக் கோப்பையில் கலக்கி நீட்டினான்.