பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

67

என்ன சிரிக்கிறீர்கள்? - ஓ! என் கதையைக் கேட்கத் தான் நின்று விட்டீர்களா?

தங்கப் பாப்பாக்கள் ஆயிற்றே நீங்கள்?

மொரார்ஜிக்குத் தெரிந்தால் நீங்கள் எத்தனை 'காரெட் ' என்று சோதிக்க ஆரம்பித்துவிடுவார்.

நான் சொன்ன அந்தப் புண்ணியவான் யார் தெரியுமா?

அவன் ஒரு திருடன்.

அடடே, என்ன இப்படிப் பயந்து விட்டீர்கள்?

கதைத் திருடன் அவன்!

அம்மாடி! இப்போதாவது உங்களுக்கு உயிர் வந்ததே?

கோமாவரம் கருப்பையா, கன்னக்கோல் வைப்பதில் கை தேர்ந்தவன், யாரிடம் பாடம் கற்றானோ தெரியவில்லை.

தெரிந்தால், அந்த வாத்தியாரிடம் நானும் பாடம் படித்துக் கொள்ளப் பிரியப்படுகிறேனோ என்று சந்தேப்படுகிறீர்களோ?

தயவு செய்து அப்படியெல்லாம் நினைத்து விடாதீர்கள்.