ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!
75
“கண்ணாமூச்சி ஆடலாம்...வாங்க வாங்க!” குரல் மூன்று முறை சட்ட ரீதியாக ஒலித்தது.
“எஸ்...ரெடி...!” என்று முத்தாய்ப்பு வைத்து விட்டு துணியை எடுத்துக் கட்டிக் கொள்ள முனைந்தான் பழனி.
அத் தருணத்தில்-
“பழனி நானும்டா என்ற ஒரு நூதனக் குரல் மொழி பேதத்துடன் எதிரொலித்தது. திரும்பினார்கள்.
சீனச்சிறுவன் 'சூ ' நின்றான்!
டேய் நீ எங்க விரோதியாக்கும்.! உன்னை நாங்க எங்க, ஆட்டத்திலே சேர்த்துக்க மாட்டோம். மரியாதையாப் போயிடுடா, சூ!...என்று. கோபாவேசம் பொங்கக் கூவினான் வேணு.
மற்றவர்கள், "சூ...ஒடு!” என்று கோஷமிட்டார்கள்.
அந்தப்பையன் சூ-மிங்-வி வியர்வை சொட்ட, கண்ணீர் வழிய செருமியவனாக அப்படியே நின்றான். பிறகு சட்டை ஓரத்தால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, “இந்தா பாருங்க!... நான் உங்க பொது விரோதியான சீன தேசத்துக் காரப்பையன்னு தானே என்னை உதாசீனம் செய்றீங்கோ?... நான் உங்க தம்பியாட்டமப்பா!... சீனநாட்டுக்காரனானாலும், நான் பிறந்தது இங்கே