பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

83

அதற்கு உண்மையான ரகசியம் ஒன்றும் இருந்தது.

அது பூங்கோதைச் சிறுமிக்கு மட்டும்தான் தெரியும்.

டாக்டர் அப்பாவின் கோபத்துக்கு 144 போட எண்ணிய சிறுமி பூங்கோதை ஒரு தந்திரத்தைக் கையாண்டாள்.

வாடிக்கை நோயாளிகளுக்கெல்லாம் கம்பவுண்டர் கண்ணப்பனைக் கொண்டு மருந்துகளை ரகசியமாகக் கொடுக்கச் செய்தாள் பூங்கோதை பிறகு அப்பாவிடம் நாடகம் நடத்தி வெற்றி பெற்றதும், அவர்களுக்குச் சேதி சொல்வதாகவும் அவர்களிடம் ஆறுதல் கூறியிருந்தாள்.

சிறுமியின் வெற்றி சிறப்பானது அல்லவா?

இந்த ரகசிய நாடகம் நாளது தேதிவரை டாக்டர் ரங்கசாமிக்குத் தெரியவே தெரியாது! -ஆமாம். இது உண்மையிலும் உண்மை.

ஆனால் நீங்கள் மட்டும் இந்தச் சிதம்பர ரகசியத்தை அந்த டாக்டரிடம் சொல்லி விடாதீர்கள்!