பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

85


சீனாக்காரன் செய்தனுப்பிய வெடிகளைச் சுடாமல், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகளையும் மத்தாப்பூக்களையுமே உபயோகிப்பது என்பதுதான் அவர்கள் செய்து கொண்ட தீர்மானம். எடுத்துக் கொண்ட முடிவும் ஆகும்!

அந்தக் கூட்டத்திலே, அங்கங்கே சிறுவர்களும் சிறுமிகளும் மத்தாப்பு கொளுத்தியும் வெடி சுட்டும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவியாக, பதவிசான குணத்துடன் மாடத்தில் இருந்தது அகல் விளக்கு ஒன்று.

அகலுக்கும் அவ்வேடிக்கைகளைக் காண உள்ளூற மகிழ்வுதான்! அந்தக் களிப்பில், காது. துளைபட எழுந்த சத்தங்களைக் கூட அது பொருட்படுத்தாமல், தன்னுடைய கடமையில் கருத்துப் பதித்திருந்தது!

“டோய், பார்த்தாயாடா மத்தாப்பூ ஜோதியை!” என்றான் ராமன். அவன் ஏழை வீட்டுப்பிள்ளை.

“ஆமாண்டா, ஆமாண்டா! இந்த அகல் விளக்கும்தான் இருக்குதே. துளியூண்டு வெளிச்சத்தோட!...ப்பூ!...” என்று நையாண்டி பேசினான் மோகன். இவனோ பங்களாவுக்குடைய பிள்ளை.

இந்த உரையாடலின் கேலியை உணர்ந்த அகல் விளக்குக்கு மனத்தில் துயரம் மூண்டது. அது பெருமூச்க் விட்டது.

ஓ - 6