பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

பூவை எஸ். ஆறுமுகம்,

விளக்கு, அடக்கமான ஒளியுடன் அது விளங்கியது. வழக்கம் போலவே!

மீண்டும் குழந்தைகள் உலகம் கும்மாள மிட்டது; மத்தாப்பூக்கள் சிரித்தன.

இக்காட்சியைக் காணக் காண, எளிமை மிக்க அகல் விளக்கின் மகிழ்ச்சி இரட்டித்தது. அதன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது. பலனைப் பற்றிக் கருதாத கடமை என்னுடையது!... என்று அந்த அகல் விளக்கு தன்னுள் சொல்லிக் கொண்டது.

தீபாவளி வேடிக்கைகளுக்குக் கேட்க வேண்டுமா, என்ன?