பக்கம்:ஓங்குக உலகம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊழ்வினையும் ஆள்வினையும்

185


பயிலும்போது வள்ளுவர் ஏற்றம் இதனினும் மேம்பட்டு நிற்பதை உணரமுடியும். கொல்லாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவருடைய உயரிய அறம் தெளிவாகக் காட்டப் பெறுகின்றது. கொல்லாமையே உயர்ந்த அறம் என்றும், முன் வேறு அறம் ஆற்ற வேண்டா நிலையில் போற்றப்பெற்ற பொய்யாமை அதற்கு இர்ண்டாவதாகவே வைக்கப் பெற வேண்டியதென்றும் காட்டுவர் வள்ளுவர். இதனால் பொய்யாமையைத் தாழ்த்திய தாகாது. அதன் ஏற்றத்தின் சிறப்பையெல்லாம் திட்டமாகக் காட்டிய பின்பே, அதனினும் மேம்பட்ட முதலாவதாகிய கொல்லாமையைக் காட்டுகிறார் அவர். எனவே பொய்யாமை பிற அறங்களிலெல்லாம் மேம்பட்டது என்பதும் உண்மை! அதனினும் மேம்பட்ட ஒரே அறம் கொல்லாமை என்பதும் தெளிவு. இந்த வகையில்தான் வள்ளுவர் தாம் கொண்ட பொருளை விளக்கிச் செல்வர்.

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”

என்பது அவர் வாக்கு.

இந்த அடிப்படை நெறியில் நின்று பார்த்தால் வள்ளுவர் ஊழ்வினையையா அன்றி ஆள் வினையையா எதைச் சிறந்தது எனக் காட்டுகின்றார் என்பது, நன்கு புலனாகும். வள்ளுவர் இரு வேறு வினைகளைப் பற்றியும் இரு வேறு அதிகாரங்களில் திட்டவட்டமாக விளக்கிக் காட்டுகின்றார். இரண்டும் ஒன்றை ஒன்று வெல்ல முடியா நிலையில் இருப்பது போன்று தோன்றினும், வள்ளுவர் தம் குறள் வழியே இரண்டில் எது சிறந்தது என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டிவிடுகிறார். இரண்டு அதிகாரங்களிலும் இருபது குறட்பாக்களிலும் இரு வேறு வினைகளைப்பற்றிக் காட்டினாலும் ஒவ்வொன்

ஓ.—12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/188&oldid=1135861" இலிருந்து மீள்விக்கப்பட்டது