பக்கம்:ஓங்குக உலகம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

ஓங்குக உலகம்


ஊழுக்கோ அதைச் செலுத்துவதாகக் கருதப் பெறும் தெய்வத்துக்கோ அஞ்சவேண்டுவதில்லை என்பதும், அவ்வாள்வினை உடையார்க்குத் தெய்வம் ஊழ்வினை நீக்கிச் செம்மை நலம் அருளும் என்பதுமே யாகும். இந்த அடிப்படையில் ஆள்வினை ஊழ்வினையை ஒட்ட வல்லது என்பதை உணர்ந்து, வள்ளுவர் குறளை வாழ்விடைக் கொள்ள விரும்பும் நாம் நம் செயலைச் செம்மையாகச் செய்து சிறப்புறுவோமாக!

ம.தி.தா.இந்துக் கல்லூரி
(திருநெல்வேலி) ஆண்டுமலர்—1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/191&oldid=1135864" இலிருந்து மீள்விக்கப்பட்டது