பக்கம்:ஓங்குக உலகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மஞ்சள்

39


காட்டிய கலைநலத்தை வீட்டிலும் நிலைநாட்ட விரும்பினான். வாயிற்படிகளில் பலப்பல சித்திர வேலைப்பாடுகளைச் செய்தான். அவற்றுள் சிறுசிறு முழைகள்-உள்ளீடுகள்-புறைகள் எப்படி எப்படியோ நுணுகி அமைத்தான். அவற்றுளெல்லாம் கால இடையீட்டால் சிறுசிறு பூச்சிகள் தங்கி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்து மக்கள் வாழ்விற்கு ஊறு விளைக்கும் அல்லவா! அவற்றைப் போக்கவே இந்த மஞ்சள் பூச்சு. இது அந்த நச்சுப் புழுப்பூச்சிகளை வளரவிடாமல் அழிப்பதோடு, வாயில்களுக்கு அழகையும் நல்லமைப்பையும் தருகின்ற தல்லவா!

இன்னும் எத்தனையோ வகையில் இதன் உபயோகத்தையும் பயனையும் எழுதிக் கொண்டு போகலாம். எனினும் இந்த அளவோடு நின்று, திசைமாறி எங்கோ எதை எதையோ நாடிச்செல்லும் தமிழ் மக்களை -சிறப்பாக மகளிரை-வெற்று நாகரிக வேடிக்கை வாழ்வினை மறந்து-மஞ்சள் குங்குமத்தோடு அமைந்த நல்ல உடல்நலத்தையும் உள உரத்தையும் செம்மை வாழ்வினையும் நீண்ட ஆயுளையும் பெற்றுச் சிறக்க முயலுங்கள் என்று வேண்டி அமைகின்றேன்.

—உலகம்


7. நல்ல உள்ளம்

லக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் மனித உள்ளமே. உள்ள நெகிழ்வும் உணர்வும் பிற உயிர்களுக்கு இருப்பதாக அறிஞர்தம் ஆய்வுகள் ஓரளவு விளக்கினாலும் அவற்றைச் செயலாற்றும் திறனும் நெறியும் அப் பிறவுயிர்களுக்குக் கிடையா. எனவே மனித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/42&oldid=1135785" இலிருந்து மீள்விக்கப்பட்டது