பக்கம்:ஓங்குக உலகம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

நான் என் வாழ்வில் வளமளித்த தமிழன்னையை மறவாது போற்றுகின்றேனாயினும், என் அன்னையின் பெயரால் கல்வி அறம் அமைத்து, சென்னை அண்ணாநகரில் என் கல்விப் பணியினைத் தொடங்கியபிறகு அத் தமிழ் உலகை விட்டே நெடுந்துாரம் சென்றுவிட்டதாக நினைத்தேன். எழுபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதி அன்னைத் தமிழுக்கு ஆரம் சூட்டி மகிழ்ந்த நான், பெற்ற அன்னைக்கு உற்ற பணி செய்யத் தொடங்கிய பிறகு நூல்கள் எழுதவுமில்லை-வெளியிடவுமில்லை. வெளிநாடுகளுக்குச் சென்றது பற்றிய ஒரு நூலும் (ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்) பள்ளியின் வளர்ச்சி பற்றிய ஒரு நூலும் (திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்) அண்மையில் வெளிவந்தன. என் நூல்களுள் சில பாட நூல்களாக அமைய அவற்றின்வழி பெற்ற பொருளே இவ்வறத்துக்கு மூலப் பொருளாக அமைந்தது என்பதை நான் பலமுறை சுட்டியிருக்கிறேன்.

சென்ற ஆண்டிலே நான் குவித்து வைத்திருந்த பழந்தாள்களையெல்லாம் பகுத்துப் பார்க்க நேரம் கிடைத்தது. நான் பல ஆண்டுகளில் பேசிய பேச்சுக்கள் (நான் பெரும்பாலும் பேசுவதையெல்லாம் எழுதிவைக்கும் வழக்கம் உடையவன்), பல இதழ்களுக்கு எழுதிய எழுத்துக்கள் என் கையகப்பட்டன. அவற்றை பகுத்துப் பார்க்கும்போது என் மாணவர் ஓரிருவர் உடனிருந்தனர். அவர்கள் இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/6&oldid=1127529" இலிருந்து மீள்விக்கப்பட்டது