பக்கம்:ஓங்குக உலகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க பச்சையப்பர்

75


«»தலைப்பில் ஐந்து பாடல்கள் எழுதினேன். அவை என் கவிதை உள்ளம் என்ற நூலில் (பக்கம். 156-57) இடம் பெற்றுள்ளன.

எண்ண எண்ண எத்தனையோ கருத்துக்கள்-அவரொடு பழகிய காலத்தில் பெற்ற அனுபவங்கள்-பல போட்டியிட்டு உள்ளத்தில் ஒன்றன் முன் ஒன்றாக வந்து நிற்கின்றன. எனினும் எல்லை கருதி இந்த அளவோடு அமையலாம் என எண்ணுகின்றேன். அண்ணாவின் புகழ் என்றும் வாழ்க! அவர் வழி ஆற்றும் தொண்டுகள் சிறக்க!

—1984


12. வாழ்க பச்சையப்பர்!

மயமுதல் குமரிவரை எண்ணற்ற அறக்கட்டளைகளை அமைத்து, நாடும் மொழியும் சமயமும் சமூகமும் வாழ வழி வகுத்த தலையாய பெரியார் பச்சையப்பர். அவர் பெயரால் இயங்கும் கல்வி நிலையங்கள் தம் 125ஆம் ஆண்டு விழாவை இதோ இவ்வாரம் கொண்டாடுகின்றன. இத் திங்கள் (மார்ச்சு) 22, 23, 24 ஆகிய மூன்று நாட்களிலும் இவ்விழா நடைபெறுகிறது. இம் மார்ச்சு மாத இருபத்திரண்டாம் நாள் பச்சையப்பர் வாழ்விலும்-ஏன் நம் வாழ்விலும் தான்-பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெறவேண்டிய நல்ல நாள். நாற்பது ஆண்டுகளே உலகில் வாழ்ந்த வள்ளல் பச்சையப்பர் அக் குறைந்த வாழ்நாளிலேயே நிறையப் பொருள் ஈட்டி, பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/78&oldid=1135808" இலிருந்து மீள்விக்கப்பட்டது