பக்கம்:ஓங்குக உலகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ஓங்குக உலகம்


பிரசாரங்களைச் (1929-31) செய்துவந்தேன். பலர் உறுப்பினராகி உடன் செயலாற்றினர். அப்போது சென்னையில் படித்துவந்த ஒ.வி. அளக்ேசன் அவர்கள் தீவிர காங்கிரஸ்வாதி. அவர் எங்கள் சங்கத்தில் கலந்து ஊக்கமளிப்பார். அப்படியே திரு. பக்தவத்சலம் அவர்களும் ஆண்டு விழா முதலியவற்றில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்துவார்கள். எனவே அந்த நாள் முதலே (1930) அவர்களை நன்கு அறிவேன்.

பின் நான் செங்கற்பட்டு மாவட்டக் கழகத்துக்கு உறுப்பினனாகப் போட்டியிட்டபோது, இந்தித் திணிப்பின் காரணமாக காங்கிரஸ் தொடர்பு அற்றவனானேன். அதற்கு முன்பும் நான் தீவிர உறுப்பினனாக இன்றேனும், காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டு நின்றேன். 1936ல் இராஜாஜி மந்திரிசபை அமைத்தபோது பக்தவத்சலம் அவர்கள் பார்லிமெண்டரி காரியதரிசியாகி, மயிலை வடக்கு மாடவீதியில் குடியிருந்தார். (அன்றைய எண்.4) அப்போது அடிக்கடி அவர்களைப் பார்ப்பதுண்டு. பின் நான் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துத் தேர்தலில் 1938ல் போட்டியிட்டபோது எனக்கு எதிராக அளகேசன், பெரியார் முத்துரங்க முதலியார் உட்படப் பலர் ஊர்தொறும் பிரசாரம் செய்தனர். ஆயினும் பக்தவத்சலம் அவர்களை அழைத்தபோது ‘நான் பரம சிவானந்தத்துக்கு எதிராக பிரசாரம் செய்ய வர மாட்டேன்’ என மறுத்துவிட்டார். இதை எனக்குப் போட்டியாக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தி வைக்கப்பெற்ற என் நண்பரே சொல்லக் கேட்டு வியந்தேன். பிறகு சென்னை வந்தபோது அவரைக் கண்டு நன்றி தெரிவித்துக் கொண்டேன். தேர்தலில் நான் வெற்றி பெற்று ஐந்தாண்டு (1838-48) உறுப்பினனாக இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/93&oldid=1127592" இலிருந்து மீள்விக்கப்பட்டது