பக்கம்:ஓடிப்போனவள் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

போய் விட்டான். அவள் ‘டக்’கென்று எழுந்து ‘டபக்’ கென்று சேலையைக் கீழே போடுவதற்குள் கதலித் தண்டுகள் போன்ற அவளது பாலிஷ் தொடைகளை அவன் மிகவும் ரசிக்க முடிந்தது......

மீண்டும் சந்தர்ப்பம் துணை புரிந்தது. சிவகாமி வீட்டிலே கட்டில் மீது படுத்துக் கிடந்தாள். அவள் மார்புச் சேலை கீழே துவண்டு கிடந்தது. ரவிக்கை கூட தளர்ந்து கிடந்தது. தனிமை என்ற நினைவுத் திரையில் ஒளிந்து விட்ட துணிவு போலும்!

தற்செயலாகவோ--வேண்டு மென்றோ-அந்தப் பக்கமாக எதையோ எடுக்க வந்தான் காத்தலிங்கம், 'அம்மா’ என்றான். அவள் அழகை அள்ளிப்பருகியபடி. அவன் திடுக்கிட்டு எழுந்தான். எவ்வளவோ ரசிக்க முடிந்தது அவனால். அவன் சிரித்தான், அவள் முகத்தைப் பார்த்தபடி,

அவளும் சிரித்தாள்.

ஆண் தானாகவே துணிவதில்லை. பெண்ணின் ஜாடைமாடையான வசியத் தூண்டுதல்களை ஏற்காமல். பெண் வெளிப்படையாக ஆசையை தூண்டுவதில்லை முதலில், ஆனால் அவளது ஒவ்வொரு செயலும் பார்வையும் அசைவும் இதய ஆழத்திலே மலர்கின்ற எண்ணத்தைப் பூர்த்தி செய்ய அவள் பரப்புகிற வலையேயாகும்.

அவள் பெண். அவளுக்கு வயது பதினேழுதான். திருப்தி தரும் கணவன் இல்லை, ஆகவே, குறுக்கேவந்து விளையாடுகிற ஆணழகைச் சுவைக்கத் தவித்தாள் சிவகாமி என்றால் தவறு உண்டோ?

அவன் என்னவோ சாமான் பற்றி வினவினான். அவள் எழுத்து போய் எடுத்து வந்தாள். போகும்