இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
கை கழுவி வந்த உமைபாலன் இலையில் குந்தினான். சோற்றைப் பிசைந்தான்.
அப்போது, ரேடியோ பயங்கரமான விதி போல அலறியது.
குந்திய உமைபாலன் குபிரென்று எழுந்து விட்டான் : 'தெய்வமாகி வந்த நேருஜியே ! ... இவ்வள்வு சீக்கிரமாக நீங்கள் தெய்வமாகி விட்டீர்களே ! ...'
அவனது பிஞ்சு மனம் வெந்து உருகியது.