பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

அன்புத் தங்கைகளுக்கும் தம்பிகளுக்கும் கதை சொல்லி நாட்கள் அதிகமாகிவிட்டன. இப்போது அதற்குரிய வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. அன்புத் தம்பி உமைபாலனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன்.

சிறுவன் உமைபாலன் தங்கப்பிள்ளை. அவன் கதை ஓர் இலட்சியத்தின் கதை. அது புனிதமானது; நல்ல நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் காட்டும் கடமையையும் கொண்டது அவனது வாழ்க்கை. உங்கள் நெஞ்சங்களிலே அவன் என்றென்றும் வாழ்வான்.

நான் மிகவும் மகிழ்ந்து எழுதிய கதை இது. எனக்குப் பயன்தரும் நூல் இது என்பது என்னுடைய நம்பிக்கை.

இவ்வகையில் இது என்னுடைய பத்தாவது புத்தகம்.

உங்கள்பால் பதிப்பகத்தினருக்கு நிரம்பவும் அன்பு உண்டு பாசமும் உண்டு. அவர்கட்கு என் வணக்கங்கள்.


பூவை. எஸ். ஆறுமுகம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/5&oldid=1280273" இலிருந்து மீள்விக்கப்பட்டது