இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சபாபதி
17
சபாபதி சங்கீதம் கற்றது.
ஒரு துணுக்கு
நாடக பாத்திரங்கள்.-சபாபதி முதலியார், சபாபதி, கிருஷ்ணசாமி முதலியார்,
இடம்:—A room in Sabapathy Mudaliar's house
Enter Sabapathi Mudaliar.
S. M. | What is this வவுத்தெரிச்சல்! I must learn this, இல்லாப் போனா all useless, ஒண்ணும் பிரயோஜனமில்லை. மச்சான் பாடரான், எனக்குப் பாடத் தெரியாதுண்ணா, அவமான case ஆயிருக்குது! -அடே சபாபதி! Enter Sabapathi. | |
---|---|---|
ச. | ஏம்பா. | |
S. M. | அடே சபாபதி, இந்தப்பக்கம் கதவண்டை நிண்ணுக்கினு ஒர்த்தரையும் உள்ளே உடாதே, யாரானா வந்தா அய்யா ரொம்ப வேலையாயிருக்கிறார், இண்னு சொல்லி விடு-போ. (Exit Sabapathi) | |
S. M. | (Begins singing) அங்கிங்கெனாதபடி- Re-enter Sabapathi. | |
ச. | ஏம்பா, என்னா வேலையாயிருக்கிறார் இண்ணு கேட்டா என்னா சொல்றது? அத்தே சொல்லல்லெயே யப்பா. | |
S. M. | அதெல்லாம் உனக்கென்னா? அது ரகசியம், ஒருத்தருக்கும் சொல்லக்கூடாது, போ. | |
ச. | எனக்கு மாத்திரம் சொல்லிடு அப்பா, நானு ஒருத்தருக்கும் சொல்ல மாட்டேன். | |
S. M. | Damn it! உனக்குக் கூட சொல்லக் கூடாது. போ. (Exit Sabapathi) | |
S. M. | (Begin singing)அங்கிங்கெனாதபடி- | |
ச. | ஏன்? (from within) Re-enter Sabapathi. | |
ச. | என்னெ கூப்டையா யப்பா? | |
S. M. | நான் கூப்டலையே. | |
ச. | என்னமோ கூச்சல் கேட்டது-நீ கூப்டையாங் காட்டிக்கினு நினைச்சிக்கினே. | |
S. M. | Nonsense, போ வெளியே! | |
ச. | இல்லே யப்பா, நீ கோவிச்சிக்காதே, ஒரு சந்தேகம் கேட்டுக்கினு போலாம்னு வந்தேன். | |
S. M. | என்னாடா அது சந்தேகம்? | |
ச. | யாரானா வந்தாதான் வேலையாயிருக்கிரே இண்ணு சொல்லணும், யாரும் வராப்போனா என்னா செய்யரது? அத்தே மாத்தரம் சொல்லிடப்பா. | |
S. M. | ஏண்டா மடையா இது கூடவா நான் சொல்லணும், யாரும் வராப்போனா நல்லதாச்சு. |