இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
சபாபதி
ச. | யாரும் வராப்போனா நல்லதாச்சோ, சரி, (போகிறான்) | |
---|---|---|
S. M. | (பாட ஆரம்பிக்கிறார்.) அங்கிங்கெனாபடி- சபாபதி மறுபடி வருகிறான். | |
ச. | நல்லதாச்சப்பா, நல்லதாச்சப்பா! | |
S. M. | என்னாதுடா அது? என்னா நல்லதாச்சு? | |
ச. | நீ தாம்பா சொன்னே; யாரும் வராப்போனா நல்லதாச்சிண்ணு. ஒர்த்தரும் வல்லெ அப்பா, ரொம்ப நல்ல தாச்சு! | |
S. M. | ஏண்டா Idiot! அத்தே சொல்லரத்துக்கா வந்தே இங்கே? இன்னொரு தரம் இந்த பக்கம் வந்தேண்ணா உன் மண்டயே ஒடச்சுடுவேன் போ. (சபாபதி போகிறான்) | |
S. M. | (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி- வேறு வழியாக சபாபதி மறுபடி வருகிறான். | |
ச. | என்னாப்பா சும்மா கோவிச்சிக்ரே! அந்த பக்கம்தானே வரக் கூடாது இண்ணே, இந்த பக்கங்கூடமா வரக் கூடாது இண்னே? | |
S. M. | என்னா regular idiot ஆயிருக்கிறான்! இவனைக் கட்டிக் கினு அழ வேண்டியதாயிருக்கிறது. என்னாத்துக்குடா வந்தே இங்கே! | |
ச. | (Smiling) இல்லேப்பா, உன் ரகசியம் கண்டு புடிச்சுட்டேம்பா -நீ பாட்டு பாடரேயப்பா. | |
S. M. | இருந்தா என்னடா! போ! உன் வேலையை பார்! (சபாபதி போகிறான்.) (பாட ஆரம்பிக்கிறார்) அங்கிங்கெனாதபடி சபாபதி மறுபடி வருகிறான். | |
ச. | (crying) எம் மண்டயே ஓனும்ணா ஒடச்சூடப்பா! என்னாலே வெளியிலே யிருக்க முடியலே யப்பா! | |
S. M. | ஏண்டா? | |
ச. | நீ பாடரத்தே கேட்டா எனக்கு கூட கொஞ்சம் பாட்டு வருதப்பா. | |
S. M. | கொஞ்சம் பாட்டு வரதாவது! போயா beggar வெளியே, (அவனை வெளியே தள்ளி கதவை சாத்துகிறார்.) (பாட ஆரம்பிக்கிறார், அங்கிங்கெனாதபடி- | |
ச. | (Sings outside) அங்கிங்கெனாதபடி- | |
S. M. | (Opens the door and drags Sabapathi by the ear) ஏண்டா,-என்னா செய்யரே வெளியே?- | |
ச. | நா மின்னேயே சொன்னனே யப்பா. நீ பாடரத்தே கேட்டு எனக்கு கூட கொஞ்ச பாட்டு வந்தது, பாடனேயப்பா, |