பக்கம்:ஓலைக் கிளி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ராணியின் உத்தரவைக் கேட்டுக்கொண்டு அரச குமாரர்கள் தங்களுடைய அறைக்குச் சென்றார்கள். அங்கே சென்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

எல்லோருக்கும் மூத்தவனுடைய வயது பதினான்கு இருக்கும். அவன் தைரியமாகத்தான் இருந்தான். இருந்தாலும் மற்றவர்களுக்குக் கவலையாக இருந்தது. "அண்ணா, நமது வீரர்கள் அத்தனைபேரும் சேர்ந்து கண்டு பிடிக்க முடியாத திருடனை நீ எப்படிக் கண்டுபிடிப்பாய்! அப்படிக் கண்டுபிடித்தாலும் நீ அவனைக் கட்டிப் பிடித்துவர முடியுமா ?” என்று விசனத்தோடு கேட்டார்கள்.

“தம்பிகளே, நீங்கள் எதற்கும் பயப்படக்கூடாது. பயப்படுவது ஆண்களுக்கு அழகல்ல. நான் திருடனை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/17&oldid=1027474" இலிருந்து மீள்விக்கப்பட்டது