72
ஓ ! ஓ ! தமிழர்களே !
தமிழ அம்மியை வடக்குக் குழவியால்
திமிறத் திமிற அரைத்துத் தேய்க்கிறான்!
அம்மி தேய்ந்தபின் முதுகிலும் அரைப்பான்!
உம்மென நீதான் ஊங்கொட் டுவையே!
இத்தகு போக்கில் மொழியையும் இழந்து
மொத்தமாய் உன்றன் மூளையும் இழந்து,
சொத்தெலாம் இழப்பாய் என்றே சொன்னால்,
செத்தையும் சருகும் செருப்பும் போல
ஒத்துழைப் பதுவே ஒற்றுமை என்பாய்!
மெத்தவும் உன்றன் மேனி தடித்தது!
இனித்தமிழ் நாடே இந்தியத் தினின்று
தனித்துப் போவது தக்கதாம் என்றால்,
அரசியல் அடிப்படை என்னென ஆய்ந்தே
130
உரசிக் கேட்பாய்; உண்மை உணர்கிலை,
பொருளியல் அடிப்படை புகலுக என்கிறாய்!
மருளுமுன் மனத்தினை என்னென மதிப்பேன்?
தமிழகம் பிரியா திருப்பது தவறெனற்(கு)
அமிழாக் கரணியம் பத்தென அறைக!
ஒன்றே, தமிழ்மொழி உயர்நிலை கெடுமே
இரண்டே இந்தி என்றையும் புகுமே!
மூன்றே சமயமும் குலமும் மூட்டிய
ஆன்ற புரட்டினை அகற்றலும் அரிதே!
1. செத்தை-குளிர் காய்பவனுக்கு உதவுவது
2. சருகு-எருவாட்டி தட்டுவோனுக்கு உதவுவது
3. செருப்பு-மிதிப்போனுக்கு உதவுவது