பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

ஓ ! ஓ ! தமிழர்களே !

“துறக்கமே எனக்குச் சிறையாக வாய்ப்பினும்
இறப்பத் தாண்டிக் குதிக்கவே விரும்புவேன்”
எனுமோர் அறிஞன் இயம்புதல் தெளிவாய்!
பினுமுன் பேதைமை பேசுவ தொழிவாய்170


ஆகவே தமிழனே! அழைக்கின் றேன், உனை!
சாகவே என்னினும், விடுதலைச் சாவே!
இன்றைத் தமிழகம் அடிமைவிட் டெழுந்தால்
பின்றைத் தமிழகம் பெரும்பயன் எய்தும்!


உன்னை விடுதலைக் கொப்புவித் திடுக!
அன்னை நாட்டினை விடுதலை செய்க!
முன்னைப் பெரும்புகழ் உலகெலாம் முழக்குக!
“என்னைக்கும் என்னை இனத்திற்கும் என்னைப்
பின்னைக்கும் யானே பெரும்புகழாம் நின்றே”னென்
றன்னைக்கும் சொல்லி,அத்தனுக்கும் சொல்லி,180
உன்னைக்கும் உன்னின் உழைக்கும் உறவுக்கும்
பன்னி யுரைத்துப் பலவா றெடுத்துரைத்து
மின்னிப் புறப்படுக; மேனிலையை
உன்னி நடத்திடுக, உறுபயன் விளையவே1972

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/84&oldid=1163513" இலிருந்து மீள்விக்கப்பட்டது