பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

79

என்னினம் உலகத் தின்மேல்
எந்நாட்டிற் போய்வாழ்ந் தாலும்
பொன்னினம் பொன்னி னந்தான் !
புகழ்பூத்த பேரி னந்தான் !
மின்னினும் கதிரி னும்போல்
மேலினப் பழமை என்பேன்!
முன்னினும் பெருமை யாக

முகிழ்ப்பதற் குரிமை வேண்டும்!

18


உரிமை நல் லுணர்வு பூத்த
ஓரினத் தன்மேல் வந்து
நரிமைகள் மொய்ப்ப தில்லை;
நாய்களும் மோப்பதில்லை!
உரிமைநல் லுணர்வு செத்த
ஓரினந் தன்னைக் காத்தல்
அருமையின் அருமை யாகும்!

அவ்வினம் கிளைத்தும் சாகும்

19


தாய்நாட்டில்-தமிழர் நாட்டில்- -
தமிழர்கள் சாகும் போது,
சேய்நாட்டில் அவரின் சேய்கள்
செழிப்புற வாழ்தல் எங்ஙன்?
பாய்கின்ற குருதி யாறு
பாய்ந்தன்றோ உரிமை என்னும்
காய்காய்க்கும்; கனிப ழுக்கும்!

கருத்தினில் வைத்துக் கொள்க!

20


இலங்கையில் பிசியில் மற்றும்
எந்நாட்டும் தமிழர் வாழ்ந்து
கலங்கையில், தமிழர் நாட்டின்
கருப்பையின் குழந்தை நெஞ்சும்
மலங்கியுள் துடித்தல் வேண்டும்!
மாண்புயிர் வேதல் வேண்டும்!
நலங்குலைந் திழிவு பட்ட

தமிழா, அந் நாளும் உண்டோ?

21


அயல்நிலந் தாவிப் போந்தீர்!
அடிமையாய் வாழ்த லுற்றீர்!
மயலுறும் கொடிய ராட்சி
மலையினால் மோத லுற்றீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/89&oldid=1163654" இலிருந்து மீள்விக்கப்பட்டது