இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
116
ஓ மனிதா
வது ஒரு நாள் அது உன்னைப் பள்ளத்தில் தள்ளிவிடும் என்பதை நீ அறியாயோ?
கொஞ்சம் யோசித்துப் பார்!—நீயாகத் தேடி அடையும் புகழ் போலிப் புகழ்; தானாக உன்னைத் தேடி வரும் புகழே உண்மையான புகழ். அதுவே உன் மறைவுக்குப் பிறகும் உன்னை வாழ வைக்கும் புகழ்.
அத்தகைய புகழை அடைந்திருக்கும் நான் அதற்காகச் செய்ததெல்லாம், செய்வதெல்லாம் என்ன? கூவுகிறேன்; அவ்வளவே.
பூவுக்கு அதன் வாசமே விளம்பரம்; எனக்கு என் கூவலே விளம்பரம்.
அதே மாதிரி உனக்கும் உன் செயலே விளம்பரமாயிருக்கட்டும்; புகழ் தானாக உன்னைத் தேடி வரும்.
அதைவிட்டு, அதற்காக உன்னை நீயே அளவுக்கு மீறி விளம்பரப்படுத்திக் கொள்வது மக்களிடையே புகழை வளர்க்காது; வெறுப்பைத்தான் வளர்க்கும்.