பக்கம்:ஓ மனிதா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஓ, மனிதா !

திரு. காமராஜ் இந்த நாட்டின் முதல்வராயிருந்தால் அவருக்கு இந்த அயோக்கியர்கள் ‘பிறந்த நாள் விழா’ கொண்டாடுவார்கள். ‘பிறந்த நாள் மலர்’ வெளியிடுவார்கள்.

அவர் போய் திரு. பக்தவத்சலம் முதல்வராய் வந்தால் அவருக்கும் இவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடுவார்கள். ‘பிறந்த நாள் விழா மலர்’ வெளியிடுவார்கள்.

அவரும் போய் திரு அண்ணாதுரை முதல்வராய் வந்தால் அவருக்கும் இவர்கள் ‘பிறந்த நாள் விழா’ கொண்டாடுவார்கள். ‘பிறந்த நாள் மலர்’ வெளியிடுவார்கள்.

அவரும் மறைந்து திரு. கருணாநிதி ஆட்சியை மேற்கொண்டால் அவருக்கும் இவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாட தவறமாட்டார்கள்.

விழாத் தலைவர்கள் மாறுபட்டாலும் இவர்களுடைய லட்சியம் மாறாது; அது என்றும் எப்போதும் ஒரே லட்சியமாகத்தான் இருக்கும். அதாகப்பட்டது ‘பிறந்த நாள் மலரில்’ வெளியாகும் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயே அந்த லட்சியம். எப்போதும் யார் பேரைச் சொன்னால் அந்த வருவாய்க்குரிய விளம்பரங்கள் அதிகமாகக் கிடைக்குமோ அப்போது அவர்களுக்கெல்லாம் ‘பிறந்த நாள் விழா’க் கொண்டாடிப் ‘பிறந்த நாள் மலர்’ வெளியிட்டுக் கொண்டிருப்பது இவர்களுடைய பிறவிக் கடன்களில் தலையாயது.

இது இவர்கள் செய்யும் தேசப்பணி; தெய்வப் பணி?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/89&oldid=1371018" இலிருந்து மீள்விக்கப்பட்டது