96
ஓ, மனிதா
நல்ல வேளை, இப்படிச் சொன்னதோடு அவர் நின்று விடவில்லை... ஆனாலும் அவன் செய்த குற்றம் குற்றமே; அதற்குரிய தண்டனையை இதோ வழங்குகிறேன்’ என்று அவனுக்குரிய தண்டனையையும் வழங்குகிறார்.
இன்னொரு கதை—என்ன கதையா?—இல்லை; உண்மை நிகழ்ச்சி சற்றுத் தூரத்தில் வரும்போதே அந்த அழகியை அவன் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அவள் அவனை நெருங்குகிறாள். கை பரபரக்கிறது. அவள் எதிர்பாராத விதமாக அவள் மேல் பாய்ந்து அவன் அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிடுகிறான்.
அவ்வளவுதான்; அவள் ‘பெண் புலி’யாகிறாள்; தன் கையிலுள்ள புத்தகத்தால் அவனை ‘மொத்து! மொத்து’ என்று மொத்துகிறாள், அவனோ அவற்றை ‘வலிக்கு இதமளிக்கும் ஒத்தடமாக’ ஏற்று அவள் மொத்துவதற்கு ஏற்றாற்போல் தன் முதுகைத் திருப்பிக் காட்டுகிறான்.
அவளுக்குக் கை வலித்ததுதான் மிச்சம்; அவன் முதுகைத் திருப்பிக் காட்டுவதை நிறுத்தவேயில்லை!
விளைவு?
புலியின் சீற்றம் அடங்குகிறது; அதற்கும் பதிலாகச் சிரிப்பு பொங்கிக்கொண்டு வருகிறது. அதைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள்; யாரையும் காணவில்லை.
அடுத்த கணம்...
அவளே அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறாள்!