பக்கம்:ஔவையார் தனிப்பாடல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ஔவையார் தனிப்பாடல்கள்



“கல்வி அறிவு உடையவரே அடர்ந்த காட்டினிடையே நெல்லி மரமானது இலையுதிர்ந்து பட்டுப்போனதாக நிற்பது எதனாலோ?

வல்லவனே! கேட்பாயாக, வெல்லுதற்கு உரியதல்லாத வழக்கினை விலை பெற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்விக்கும் வல்லமை கொண்டவனின் சுற்றத்தைப்போல, அதுவும் மாண்டு போயிருக்கிறது.”

இது செய்யுளின் பொருள். இதனால் அழிவழக்குச் சொல்பவன் குடும்பத்தோடு தானும் அழிவான் என்பது எடுத்துச் சொல்லப்பட்டது.

71. வீரம் எது?

ண் பெற்றவர் எல்லோருமே காண்கின்றோம். ஆனால், காண்பது அனைத்துமே நல்ல காட்சியாகுமா? காட்சி என்பது, காண்பவற்றின் உண்மையான தன்மையினைக் கண்டறிவதே ஆகும். இங்ங்னம் கொண்டால், அனைத்தும் இறைவனின் சொரூபமே என்பார்கள் ஆன்றோர்கள். உயர்வென்பதும் தாழ்வென்பதும் காண்பவற்றில் இல்லை. அழகென்பதும் குரூரம் என்பதும் பொருளில் இல்லை. நல்லதென்பதும் தீயதென்பதும் நாட்டில் இல்லை. எல்லாம் ஈசுவர சொரூபமாகிய ஒன்றே; எல்லாம் சமமே. இதனைக் காண்பதுதான் உண்மையான தெளிவான காட்சியாகும் என்பார்கள்.

வீரம் என்பது எதிர்த்தோர் பலரையும் வென்று அழிப்பது ஆகாது. அடங்காத ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதே உண்மையான வீரமாகும்.

கல்விக்கு எல்லை கிடையாது. சாகுந்துணையும் கற்பதுதான் உண்மையாகக் கற்பது ஆகும். இடையில் கற்று முடித்தோம் என நினைப்பது பேதைமையாகும்.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். பிறரெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்று, திருக்குறள் கூறும். பிறருக்கு ஏவல் செய்து அதன் பயனால் வருவன கொண்டு உயிர் வாழ்வது இழிந்தது. அது உணவே ஆகாது.

ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான்தன் வீரமே வீரம்-என்றானும்
சாவாமற் கற்பதே கல்வி தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்.

"அனைத்தையும் இறைவனின் சொரூபம் என்றபடி ஒன்றாகக் காண்பதே மெய்க் காட்சியாகும். ஐம்புலன்களையும்