லா. ச. ரா
127
அட மஹாபாவி எந்தக் கசாப்புலேருந்து நேரே என் வயத்துலே முளைச்சேடா ? எந்த ராக்ஷஸப் பிறவிடா நீ ?”
டிங்சர் ரொம்பவும் எரிஞ்சுது அழுதேன்.
"வாயைத் திறந்தையோ, போட்டுடுவேன் பலி! செஞ்ச காரியம் ஜரிக்க அழுகை வேறேயா? உம்-மூச்சு !"
வாயை இறுகப் பொத்திண்டு, பீறி வர தேம்பலை உள்ளேயே தள்ளிண்டு, அவஸ்தையில் முழி பிதுங் கிண்டு, அம்மா பயந்துபோய் ஏண்டா கண்ணேன்னு அணைச்சுண்டு
அத்தோடு சரி.
மறுபடியும் என்னத்தைச் செய்யலாம். எதை உடைக்கலாம்னுதான் துருதுருக்கறது.
"சேகர், கத்தாதே - ஆபீஸ் ரூமிலிருந்து அப்பா
அப்படிச் சொன்னதனாலேயே "ஹொஹ்-ஹோ !”. வாய்விட்டுக் கர்ஜிக்கத் தோணறது.
கர்ஜிக்கிறேன்.
வாங்கிக்கறேன் .
வசவு, அடி, திட்டு, உதை-ஊ-ஹல்ம்.
"கைதான் வலிக்கிறது. அத்தனையும் துடைச்சுப் போட்டுத்தானே வளையவரான் !"
"நீயே பார்த்துக்கோ, உன் பிள்ளையை '
"ஏன் நீங்களேதான் பாருங்கோளேன். உங்கள் பிள்ளையை !” - -
எனக்கு என் அப்பா. என் அம்மா, ஆனால், இவா மாத்திரம் உன்னுது உன்னுதுன்னு ஒருத்தருக் கொருத்தர் ஒதுக்கித் தள்றாளே ! .” -