164
கங்கா
என் தம்பி வீட்டையழித்துக் கட்டி வாடகைக்கு விடப் போகிறான். அவனுக்கு ஏற்கெனவே மூன்று வீடுகள் இருக்கின்றன. இங்கு நான் இன்றைய பொழுது எனக்கு குடும்ப ஜீவனத்துக்கு ஒரு நோயாளியாவது வரமாட் டானா என்று காத்துக் கொண்டிருக்கிறேன்:
ரேழியில் ஒரு நிழல் தட்டிற்று. என்னப்பா என் பிரார்த்தனை உன் காதுக்கு எட்டிவிட்டதா?
"டாக்டர் இருக்காரா ?” "வாங்கோ வாங்கோ உட்காருங்கோ என்னய்யா, மழை நின்று வரக்கூடாதா ? ஒரே தொப்பலாய் இருக் கிறீர்களே !”
வந்த ஆள் நாய்க்குட்டி போல் உடம்பை உதறிக் கொண்டான் என் முகத்தில் ஜலத் துளிகள் தெறித்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டேன். வந்தவனுடன் உடனே சண்டை போட முடியுமா ? ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வந்திருக்கிற பேரம். நினைத்துப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
“டாக்டர் ! நீங்கள் ரொம்பவும் கெட்டிக்காரர் என்று சொல்கிறார்கள்.”
"எனக்கு வெட்கமாயிருக்கிறதே" என்றேன். அம் மாதிரி ஒருவரும் சொன்னதாய் நான் கேட்டதில்லை, இருந்தாலும் சொல்பவனை ஏன் தடுக்கணும் ?
"டாக்டர், நீங்கள் ரொம்ப நல்லவர் என்று கேள்விப்படுகிறேன்-”
என் உற்சாகம் விழுந்தது. "டாக்டர், நீங்கள் ரொம்ப நல்லவர்"
"டாக்டர், நீங்கள் பொருள் படுத்த மாட்டீர் என்று எனக்குத் தெரியும்-”